Tuesday, November 9, 2010

முதல்துளி...

துளியாகத்தான்
விழுந்தாய்
ஏனோ என்னில்
கடலாய்ப்பொங்கியது
உன் நினைவுகள்!...
   
ஊற்றெடுக்கும் உன்
நினைவை
பனித்துளியாய்
பாதுகாக்கிறேன்
இன்றும்.........

ஆயிரம் துளிகள்
விழுந்தாலும் ஏனோ
இன்றும் என்னுள்
மலரும் நினைவுகளாய்
அந்த முதல்துளி!...

Saturday, November 6, 2010

ரகசியத்தோழன்....

*என் இயத்தில்
வண்ணத்துப்பூசிகள் 
சிறகடிக்கும்
ஒரு அழகான தருணத்தில்
நீ அறிமுகமானாய்!.  

*வானம் முழுக்க 
நட்சத்திரமோ
நிலவோ இல்லை!
இயற்கை சூழலும் இல்லை!
மனதை வருடும்
மழையும் இல்லை!

*ஒரு ஒருவேளை
நடந்திருக்கலாம் 
இயற்கை அனைத்தும்
எனக்கு உணர்த்த முன் வந்துதிருக்கலாம்
எனக்கொரு
தோழி கிடைக்கப்போவதை!..  

*நானும்
தோழமையோடுதான் 
பேசினேன்
ஆனால் 
என்னையறியாமல் 
என் இதயம் ஏனோ 
உன்னை உள்ளுக்குள்
ரகசிய தோழியாய்!....  

*என் உள்ளம் சத்தமாகவும்
இதயம் கனமாகவும்
வார்த்தைகள் ரகசியமாகவும்
சொல்ல
முனைகின்ற
என் வலிகளை 
உன்னிடம் எப்படி சொல்வது!..  

*இதயம் 
கணக்கும் போது
உன் உதடுகள் 
கசிந்து சென்ற
ஒரு சில வார்த்தைகள்
மட்டும் 
இன்னும் நினைவூட்டங்களாகவே
என் நெஞ்சில் இன்றும்!..  

*துடிப்புக்களால், 
உணர்வுகளால், 
வலிகளால்,  
காகிதத்தில் கண்ணீர் துளி விழ,
காட்சிகள் கண் முன்னோட, 
பேனாவை விரல்கள்
அழுத்தும் விசை குறைய,
எத்தனை கவிதைகள் 
உனக்காக எழுதிருப்பேன் 
அத்தனையும்
எனது பெட்டியில்
இன்றும் பத்திரமாய்!...  


*இதற்கெல்லாம்  அர்த்தம் நட்பென்று
நான் 
சொன்னால் நீ நம்பிவிடவும் 
ஆமாம் என்றால் 
ஒத்துக்கொள்ளவுமா போகிறாய்...
இறுதிவரை 
ரகசிய தோழனாய் நான்.........





Monday, October 25, 2010

நிழலாய் நின்றிருப்பேன்..


பார்த்து பேசி பலநாட்கள் ஆகிவிட்டது
நேற்றுதான் நம் கல்லூரி வாழ்கை 
துவங்கியது போல் உள்ளது...
ஆனால் 7 ம் ஆண்டை தொட்டுவிட்டோம்,
நமது நட்புக்கு   வயது 7 ...     
நான் உனக்காக கிறுக்கிய வரிகள் ஆயிரம்..
ஆனால் அத்தனையும் இருளில்
வரைந்த ஓவியமாய்....ஆனால்?.
இன்று நம் நட்பை காவியமாய்
படைக்க இதோ கிறுக்குகிறேன்... 
உனக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம்...
நிஜங்கள் எனக்கு கை கொடுப்பதில்லை...
கனவுகள் உனக்கு கை கொடுப்பதில்லை...
இருந்தும், நம்பிக்கையின் பாதையில், ஊர்ந்து கொண்டிருக்கிறோம்...
சில உறவுகளுக்கு அர்த்தங்கள் இல்லை...
நீ இல்லையேல், வாழ்வில் அர்த்தம் இல்லை...
இந்த வார்த்தைகள், நேரம் தாழ்ந்தாலும், நேசம் தாளாது ...
என் வெற்றியில் உன் பங்கிருக்கும்...
உன் வெற்றியில், நிச்சயம் என் பங்கிருக்கும்...
நேரில் பார்க்காவிட்டாலும்...
நேரம் கிறுக்கி விட்டது..
நம் நட்பை...
கிறுக்களும் காவியமாகிவிட்டது...
இது அதிசயம்...
என்றும் உன் அருகில் இருப்பேனா என்பது எனக்கு தெரியாது..
ஆனால்...
நட்பென்னும் நிழலை கொண்டு நான் நின்றிருப்பேன்...
உனக்காக..