Tuesday, November 9, 2010

முதல்துளி...

துளியாகத்தான்
விழுந்தாய்
ஏனோ என்னில்
கடலாய்ப்பொங்கியது
உன் நினைவுகள்!...
   
ஊற்றெடுக்கும் உன்
நினைவை
பனித்துளியாய்
பாதுகாக்கிறேன்
இன்றும்.........

ஆயிரம் துளிகள்
விழுந்தாலும் ஏனோ
இன்றும் என்னுள்
மலரும் நினைவுகளாய்
அந்த முதல்துளி!...

1 comment:

  1. இதைப் பார்த்ததும் எனக்கும் இது போல கவிதை எழுத வேண்டும் எனத் தோன்றுகிறது!
    தொடருங்கள் உங்கள் இனிய கவிதைப் பயணத்தை.... :-)

    ReplyDelete