துளியாகத்தான்
விழுந்தாய்
ஏனோ என்னில்
கடலாய்ப்பொங்கியது
உன் நினைவுகள்!...
ஊற்றெடுக்கும் உன்
நினைவை
பனித்துளியாய்
பாதுகாக்கிறேன்
இன்றும்.........
ஆயிரம் துளிகள்
விழுந்தாலும் ஏனோ
இன்றும் என்னுள்
மலரும் நினைவுகளாய்
அந்த முதல்துளி!...
*என் இதயத்தில்
வண்ணத்துப்பூசிகள்
சிறகடிக்கும்
ஒரு அழகான தருணத்தில்
நீ அறிமுகமானாய்!.
*வானம் முழுக்க
நட்சத்திரமோ
நிலவோ இல்லை!
இயற்கை சூழலும் இல்லை!
மனதை வருடும்
மழையும் இல்லை!
*ஒரு ஒருவேளை
நடந்திருக்கலாம்
இயற்கை அனைத்தும்
எனக்கு உணர்த்த முன் வந்துதிருக்கலாம்
எனக்கொரு
தோழி கிடைக்கப்போவதை!..
*நானும்
தோழமையோடுதான்
பேசினேன்
ஆனால்
என்னையறியாமல்
என் இதயம் ஏனோ
உன்னை உள்ளுக்குள்
ரகசிய தோழியாய்!....
*என் உள்ளம் சத்தமாகவும்
இதயம் கனமாகவும்
வார்த்தைகள் ரகசியமாகவும்
சொல்ல
முனைகின்ற
என் வலிகளை
உன்னிடம் எப்படி சொல்வது!..
*இதயம்
கணக்கும் போது
உன் உதடுகள்
கசிந்து சென்ற
ஒரு சில வார்த்தைகள்
மட்டும்
இன்னும் நினைவூட்டங்களாகவே
என் நெஞ்சில் இன்றும்!..
*துடிப்புக்களால்,
உணர்வுகளால்,
வலிகளால்,
காகிதத்தில் கண்ணீர் துளி விழ,
காட்சிகள் கண் முன்னோட,
பேனாவை விரல்கள்
அழுத்தும் விசை குறைய,
எத்தனை கவிதைகள்
உனக்காக எழுதிருப்பேன்
அத்தனையும்
எனது பெட்டியில்
இன்றும் பத்திரமாய்!...
*இதற்கெல்லாம் அர்த்தம் நட்பென்று
நான்
சொன்னால் நீ நம்பிவிடவும்
ஆமாம் என்றால்
ஒத்துக்கொள்ளவுமா போகிறாய்...
இறுதிவரை
ரகசிய தோழனாய் நான்.........